search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாநகர் அஞ்சலகம்"

    வெளிநாடுகளுக்கு பதிவு தபால் அனுப்புபவர்களின் வசதிக்காக அண்ணாநகர் அஞ்சலகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை வடகோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணாநகர் அஞ்சலகத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் அனுப்புபவர்களுக்காக ஒரு சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு அண்ணாநகர் அஞ்சலகத்தின் துணை அஞ்சல் அதிகாரியை 044-26211012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×